|
|||||
அன்னா குழுவினரின் கட்சி தேர்தலில் தோல்வி அடையும் - முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே |
|||||
பெங்களூர், இந்தியாவில் ஊழல் எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டு கட்சி நடத்துவது மிகவும் கடினம். இதனால் அன்னா குழுவினர் ஆரம்பிக்கும் கட்சி பண பலத்தை எதிர்க்க முடியாமல் தோல்வி அடையும் என்று முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். அன்னா குழுவில் உறுப்பினராக இருந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி,
அன்னா குழுவினர் அரசியல் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். இந்த முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஊழல் எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி தேர்தலை எதிர்கொள்ளும் நிலை இந்தியாவில் தற்போதைக்கு இல்லை. தற்போது உள்ள நிலையில் தேர்தலில் அரசியல் கட்சிகளின் பணபலத்தை அன்னா குழுவினரால் எதிர்க்க முடியாது. மேலும், பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மனநிலையில் வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் மனம் மாறும் வரை அன்னா குழுவால் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார்.
பெங்களூர், இந்தியாவில் ஊழல் எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டு கட்சி நடத்துவது மிகவும் கடினம். இதனால் அன்னா குழுவினர் ஆரம்பிக்கும் கட்சி பண பலத்தை எதிர்க்க முடியாமல் தோல்வி அடையும் என்று முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். அன்னா குழுவில் உறுப்பினராக இருந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி,
அன்னா குழுவினர் அரசியல் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். இந்த முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஊழல் எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி தேர்தலை எதிர்கொள்ளும் நிலை இந்தியாவில் தற்போதைக்கு இல்லை. தற்போது உள்ள நிலையில் தேர்தலில் அரசியல் கட்சிகளின் பணபலத்தை அன்னா குழுவினரால் எதிர்க்க முடியாது. மேலும், பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மனநிலையில் வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் மனம் மாறும் வரை அன்னா குழுவால் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார். |
|||||
by Swathi on 21 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|