இந்திய எல்லை பகுதியில் சீன இராணுவத்தின் ஊடுருவல் தொடர்ந்து வருவதால், அங்கு போர் மூளும் அபயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி இரு நாட்டு தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. சீன இராணுவத்தில் ஊடுருவல் குறித்து இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறும்போது, சீன ராணுவம் ஊடுருவல் பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சீனாவுடன் பல்வேறு நிலைகளிலும் பேச்சு வார்த்தை தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவின் நலனில் சமரசத்துக்கே இடமில்லை. நாட்டின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் காக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் சீன பிரதமரின் இந்திய பயணம் கேள்விகுறியாகியுள்ளது.
|