புது தில்லி, ஆக. 6:
காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெறும் என்றும்; அதேநேரத்தில், தமிழக அரசு கோரியபடி காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் என்று பிரதமருக்கு கட்டளையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஃபாலி நாரிமன், காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட கர்நாடக அரசுக்கு ஆட்சேபமில்லை என்று தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ""காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமருக்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது. இந்த விவகாரத்தில் ஆலோசனை வேண்டுமானால் வழங்கலாம். தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரணை நடத்தப்படும்'' என்று தெரிவித்தனர்.இந்த நிலையில், கடந்த ஜூலை 21-ம் தேதி தாக்கல் செய்த மனுவில், காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்டவும், வறட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நதி நீர்ப் பங்கீட்டை கர்நாடகம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த 3 மனுக்களும் ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
|