LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஆகஸ்ட் 17-ல், காவிரி வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை

புது தில்லி, ஆக. 6:

 

     காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெறும் என்றும்; அதேநேரத்தில், தமிழக அரசு கோரியபடி காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் என்று பிரதமருக்கு கட்டளையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஃபாலி நாரிமன், காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட கர்நாடக அரசுக்கு ஆட்சேபமில்லை என்று தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ""காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமருக்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது. இந்த விவகாரத்தில் ஆலோசனை வேண்டுமானால் வழங்கலாம். தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரணை நடத்தப்படும்'' என்று தெரிவித்தனர்.இந்த நிலையில், கடந்த ஜூலை 21-ம் தேதி தாக்கல் செய்த மனுவில், காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்டவும், வறட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நதி நீர்ப் பங்கீட்டை கர்நாடகம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த 3 மனுக்களும் ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

by Swathi   on 07 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.