நாடு முழுவதும் மகளிர் வங்கிகள் அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்த வங்கிகளுக்கு பாரதீய மஹிளா வங்கி(Bhartiya Mahila Bank) என பெயரிடப்பட உள்ளதாகத் தெரிகிறது.நாடு முழுவதும் மகளிருக்கு நிதி சேவைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி சேவைகள் அளிப்பது ஆகியவற்றுக்காக பிரத்தியேகமாக இந்த வங்கி உருவாகிறது. இந்த வங்கிகளில் மகளிர் மட்டுமே பணிபுரிவர். இவ்வாண்டு நவம்பர் மாதம் முதல் வங்கி செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மகளிர் வங்கி சட்ட மசோதா அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
|