புதுடெல்லி : வடகிழக்கு மாநிலத்தவரிடையே பீதியை போக்கும் வகையில் அலைபேசி மூலம் குறுஞ்செய்திகளை மொத்தமாக அனுப்ப நாடு முழுவதும் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாமில் பழங்குடியின மக்களுக்கும் வங்கதேச முஸ்லிம்களுக்கும் சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் 77 பேர் பலியாயினர். இதற்கு கண்டனம் தெரிவித்து மும்பையில் கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட வன்முறையிலும் இரண்டு பேர் பலியாயினர். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கப்பட்டதாக வதந்தி பரவியது. மிரட்டல் எஸ்எம்எஸ்களும் பரவியதையடுத்து பீதியடைந்த வடகிழக்கு மாநில மக்கள் மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இவர்களில் அசாமியருக்கு தான் மிரட்டல் என்றாலும் மற்ற வடகிழக்கு மாநிலத்தவருக்கு மிரட்டல் எஸ்எம்எஸ் வருகிறது. இவர்களின் பீதியை போக்கவும் அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதை தடுக்க வும் செல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்பும் எஸ்எம்எஸ் மற்றும் படம் மற்றும் வீடியோ காட்சிகளை அனுப்பும் எம்எம்எஸ்களை ஒட்டுமொத்தமாக அனுப்புவதற்கு நாடு முழுவதும் 15 நாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவர் ஒரே நேரத்தில் 5 எஸ்எம்எஸ்களுக்கு மேல் அனுப்ப முடியாது.
புதுடெல்லி : வடகிழக்கு மாநிலத்தவரிடையே பீதியை போக்கும் வகையில் அலைபேசி மூலம் குறுஞ்செய்திகளை மொத்தமாக அனுப்ப நாடு முழுவதும் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாமில் பழங்குடியின மக்களுக்கும் வங்கதேச முஸ்லிம்களுக்கும் சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் 77 பேர் பலியாயினர். இதற்கு கண்டனம் தெரிவித்து மும்பையில் கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட வன்முறையிலும் இரண்டு பேர் பலியாயினர். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கப்பட்டதாக வதந்தி பரவியது. மிரட்டல் எஸ்எம்எஸ்களும் பரவியதையடுத்து பீதியடைந்த வடகிழக்கு மாநில மக்கள் மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இவர்களில் அசாமியருக்கு தான் மிரட்டல் என்றாலும் மற்ற வடகிழக்கு மாநிலத்தவருக்கு மிரட்டல் எஸ்எம்எஸ் வருகிறது. இவர்களின் பீதியை போக்கவும் அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதை தடுக்க வும் செல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்பும் எஸ்எம்எஸ் மற்றும் படம் மற்றும் வீடியோ காட்சிகளை அனுப்பும் எம்எம்எஸ்களை ஒட்டுமொத்தமாக அனுப்புவதற்கு நாடு முழுவதும் 15 நாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவர் ஒரே நேரத்தில் 5 எஸ்எம்எஸ்களுக்கு மேல் அனுப்ப முடியாது.
|