புது டெல்லி, ஜூலை 19, இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது என பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது, இந்த அனுமதி அளிக்கும் கொள்கை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று பிரதமரை தொழிலதிபர் ரத்தன் டாடா சந்தித்துப் பேசினார். தமது ட்விட்டர் தளத்திலும் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்று ரத்தன் டாடா இன்று எழுதியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவின் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்று அண்மையில் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
புது டெல்லி, ஜூலை 19, இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது என பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது, இந்த அனுமதி அளிக்கும் கொள்கை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், இன்று பிரதமரை தொழிலதிபர் ரத்தன் டாடா சந்தித்துப் பேசினார். தமது ட்விட்டர் தளத்திலும் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்று ரத்தன் டாடா இன்று எழுதியிருக்கிறார்.அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவின் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்று அண்மையில் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
|