நிலக்கரி சுரங்க ஊழலில் பிரதமர் பதவி விலகியே ஆக வேண்டும் என்பதில் பா.ஜ.க திட்டவட்டமாக உள்ளது. இதுதொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, தனது வலைத்தளத்தில் நேற்று கூறியது,
நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் பாராளுமன்றம் ஒரு வாரத்துக்கு மேலாக முடங்கி இருக்கிறது. அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்துவிட வேண்டும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக தேர்வுக்குழுவினரின் செயல்பாடுகள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். இதைச்செய்தால் பாராளுமன்ற முடக்கப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம். ஆனால் அரசு இதற்கான வேலைகளை இன்னும் மேற்கொள்ளவில்லை. இந்தநிலையில் பிரதமர் மன்மோகன் சிங் பா.ஜ.க-வைச் சேர்ந்த முதல் மந்திரிகளை குறை கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.
நிலக்கரி சுரங்க ஊழலில் பிரதமர் பதவி விலகியே ஆக வேண்டும் என்பதில் பா.ஜ.க திட்டவட்டமாக உள்ளது. இதுதொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, தனது வலைத்தளத்தில் நேற்று கூறியது, நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் பாராளுமன்றம் ஒரு வாரத்துக்கு மேலாக முடங்கி இருக்கிறது. அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்துவிட வேண்டும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக தேர்வுக்குழுவினரின் செயல்பாடுகள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். இதைச்செய்தால் பாராளுமன்ற முடக்கப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம். ஆனால் அரசு இதற்கான வேலைகளை இன்னும் மேற்கொள்ளவில்லை. இந்தநிலையில் பிரதமர் மன்மோகன் சிங் பா.ஜ.க-வைச் சேர்ந்த முதல் மந்திரிகளை குறை கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.
|