கொழும்பு : இலங்கையில் இருந்து மக்கள் யாரும் தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை அரசு எச்சரித்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில். மேலும் இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களை மறு குடியமர்த்துவதில் இலங்கை அரசும் அதன் அதிபரும் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. சென்னையில் கால்பந்து பயிற்சி போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுத்ததுடன் அவர்கள் அனைவரும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் இலங்கை வெளியுறவு துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா, புனித யாத்திரை, விளையாட்டு, கலாசாரம் மற்றும் பல்வேறு தொழில் பயிற்சி ஆகியவவைகளுக்காக செல்பவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சம்பவங்களை இலங்கை அரசு வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே இலங்கைவாசிகள் தமிழ்நாட்டிற்கு செல்வதை பாதுகாப்பு கருதி, மறு உத்தரவு வரும் வரை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கொழும்பு : இலங்கையில் இருந்து மக்கள் யாரும் தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை அரசு எச்சரித்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில். மேலும் இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களை மறு குடியமர்த்துவதில் இலங்கை அரசும் அதன் அதிபரும் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. சென்னையில் கால்பந்து பயிற்சி போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுத்ததுடன் அவர்கள் அனைவரும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.இந்நிலையில் இலங்கை வெளியுறவு துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா, புனித யாத்திரை, விளையாட்டு, கலாசாரம் மற்றும் பல்வேறு தொழில் பயிற்சி ஆகியவவைகளுக்காக செல்பவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சம்பவங்களை இலங்கை அரசு வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே இலங்கைவாசிகள் தமிழ்நாட்டிற்கு செல்வதை பாதுகாப்பு கருதி, மறு உத்தரவு வரும் வரை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
|