மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை. சர்வதேச அளவில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் வகையில் செயல்படுவதை இந்தியா எப்போதும் ஏற்றுக் கொண்டது இல்லை, என ஆசிய பசிபிக் சர்வதேச வர்த்தக சம்மேளன மாநாட்டில் குர்ஷித் பேசியுள்ளார்.
|