|
||||||
இந்தியாவில் 414 பேர் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கின்றனர் !! |
||||||
இந்திய சிறைச்சாலைகளில் 414 தூக்கு தண்டனை கைதிகள் இருப்பதாக தேசிய குற்ற ஆவணங்கள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இந்திய சிறைச்சாலைகளில் உள்ள தூக்கு தண்டனை கைதிகள் நிலவரம் குறித்து, தேசிய குற்ற ஆவணங்கள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் உள்ள அனைத்து சிறைகளிலும், 414 பேர் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக, உத்திரபிரதேசத்தில் மட்டும், 106 பேர் தூக்குதண்டனை கைதிகள்.மேலும், கர்நாடகாவில் 63 பேரும், மகாராஷ்டிராவில் 51 பேரும், பீகாரில் 42 பேரும், டெல்லியில் 27 பேரும், குஜராத்தில் 19 பேரும், பஞ்சாபில் 16 பேரும், கேரளாவில் 14 பேரும், தமிழ்நாட்டில் 12 பேரும், அசாம் பேரும், காஷ்மீர் மற்றும் மத்தியபிரதேசத்தில் தலா 10 பேர் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கிறார்கள்.
இந்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் சுமார் 54 சதவீதம் பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு 61 கைதிகளின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மட்டும் மொத்தம் 97 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தேசிய குற்ற ஆவணங்கள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |
||||||
India has 414 Death Row Prisoners | ||||||
India has 414 convicts on the Death Row. The National Crime Records Bureau (NCRB) has reported that there as are many as 106 death penalty convicts are in jails in Uttar Pradesh.Those on the death row in other states include 63 in Karnataka, 51 in Maharashtra, 42 in Bihar, 27 in Delhi, 19 in Gujarat, 16 in Punjab, 14 in Kerala, 12 in Tamil Nadu, and 10 each in Assam, Jammu & Kashmir and Madhya Pradesh. |
||||||
by Swathi on 25 Oct 2013 0 Comments | ||||||
Tags: இந்திய சிறைச்சாலை தூக்கு தண்டனை 414 பேர் கைதிகள் தேசிய குற்ற ஆவணங்கள் மையம் 414 Death Row Death Row Prisoners | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|