புதுடெல்லி : சுதந்திர தின விழா மாநிலங்களில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. காஷ்மீரில் ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது. நாட்டின் 66வது சுதந்திரதின விழா வழக்கமான உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். கர்நாடகாவில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், கேரளாவில் முதல்வர் உம்மன் சாண்டி, மகாராஷ்டிராவில் முதல்வர் பிரித்விராஜ் சவான், உ.பி.யில் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார், குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடி உட்பட அந்தந்த மாநிலங்களில் முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினர்.
|