|
|||||
இலங்கை ராணுவத்திற்கு அளித்து வரும் பயிற்சியை நிறுத்த போவதில்லை - மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் |
|||||
புதுடெல்லி : இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா அளித்து வரும் பயிற்சியை நிறுத்த முடியாது என்று ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவ அதிகாரி மேஜர் திசநாயகா மகோத்தலலாகே, கடற்படை கேப்டன் ஹெவாவாசம் கண்டாடஜே ஆகிய 2 பேருக்கு ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் கடந்த மே 19ம் தேதி முதல் 11 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது.
இலங்கை போரில் பல தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில், இலங்கை வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஆகவே, அந்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்தி இலங்கைக்கு திருப்ப அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த 25ம் தேதி கடிதம் எழுதினார்.
பல்லம் ராஜூ நிபர்களுக்கு அளித்த பேட்டியில்,
‘‘இலங்கை நமக்கு நட்பான அண்டை நாடு" எனவே, இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும். இது குறித்து மாநில அரசுகள் ஆட்சேபம் தெரிவித்தால் அதை அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்’’ என்றார்.
புதுடெல்லி : இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா அளித்து வரும் பயிற்சியை நிறுத்த முடியாது என்று ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவ அதிகாரி மேஜர் திசநாயகா மகோத்தலலாகே, கடற்படை கேப்டன் ஹெவாவாசம் கண்டாடஜே ஆகிய 2 பேருக்கு ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் கடந்த மே 19ம் தேதி முதல் 11 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இலங்கை போரில் பல தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில், இலங்கை வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஆகவே, அந்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்தி இலங்கைக்கு திருப்ப அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த 25ம் தேதி கடிதம் எழுதினார்.
பல்லம் ராஜூ நிபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘இலங்கை நமக்கு நட்பான அண்டை நாடு" எனவே, இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும். இது குறித்து மாநில அரசுகள் ஆட்சேபம் தெரிவித்தால் அதை அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்’’ என்றார்.
|
|||||
by Swathi on 28 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|