புதுடெல்லி: அசாம் வன்முறை தொடர்பாக வதந்திகள் பரவுவதைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெங்களூருவில் வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக வதந்தி பரவியது மிகவும் வேதனைக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மேற்கொண்டு வதந்தி பரப்புவதைத் தடுக்க கர்நாடக முதலமைச்சரிடம் பேசியிருப்பதாகவும், வெளி மாநில மக்களை பயமுறுத்தும் வகையில் எஸ்.எம்.எஸ். மூலம் வதந்தி பரவுவதைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
|