இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் ஆயிரகணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதனால், தமிழ்நாட்டில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கை வாசிகள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதை காரணம் காட்டிய இலங்கை அரசு, மறு உத்தரவு வரும் வரை, தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கைவாசிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இந்த அறிவுரை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதின் அளித்த பெட்டியில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் எந்த பகுதிக்கும் இலங்கை பிரதிநிதிகள் மற்றும் இலங்கைவாசிகள் வந்தால், அவர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை நடத்தி மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே இந்தியா வரும் இலங்கை சுற்றுலா பயணிகள் தாக்குதல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினார்.
|