இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப் போர் ஏற்படும் பட்சத்தில், சுமார் 200 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலக நாடுகள், தங்களுக்குள் அணு ஆயுதங்களை பயன்படுத்தி போர் செய்யும் போது, அது, ஏராளமான உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக கஷ்மீர் பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே மூன்று முறை போர் நிகழ்ந்துள்ளது. இனி வரும் காலங்களில் இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டால், அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு அணு ஆயுதப் உபயோகித்தால், சுமார் 200 கோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்கள். இந்த எண்ணிக்கை, உலக மக்கள் தொகையில், நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் தாக்கம் சீனாவிலும் இருக்கும் என சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
|