புதுடெல்லி : நிலக்கரி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் நாடாளுமன்றம் நேற்று 4வது நாளாக முடங்கியது.கடந்த 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்க உரிமைகளை ஏலம் விடாமல் தனியாருக்கு வழங்கியதில் ரூ.1.86 லட்சம் கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அந்த சமயத்தில் நிலக்கரித்துறை பொறுப்பை கவனித்து வந்த பிரதமர் மன்மோகன் சிங் இந்த ஊழலுக்கு காரணம் என்றும், இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் அமளியால் கடந்த செவ்வாய்கிழமை முதல் 3 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. இந்தநிலையில் நேற்றும் எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியது.
|