புது தில்லி, ஆக. 6:
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன், ஆழ்ந்த கவலையுற்றேன். இந்தச் சம்பவத்தில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல பக்தர்கள் காயமடைந்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைச் சம்பவம் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் எடுப்பார்கள் என நம்புகிறேன். இத்தகைய "அறிவற்ற வன்முறைச் செயல்' ஒரு வழிபாட்டுத் தலத்தில் நடந்திருப்பது வருத்தத்திற்குரியது.இத்தகைய வன்முறை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்வர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
|