புதுடெல்லி : நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஏற்பட்ட ஊழல் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் பிரதமரிடமே உள்ளது என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், நிலங்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை பிரதமர் மன்மோகன் சிங்தான் பரிசீலனை செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார். நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து விவாதம் செய்ய தயார் என்பதே அரசின் நிலைப்பாடு. ஆனால் ப.ஜ.க அதற்கு ஒத்துழைப்பு தயாராக இல்லை எனதே உண்மை.
|