புனே : புனேயில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு வளைகுடா நாடான ஜோர்டானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.குண்டு வெடிப்பில் காயமுற்று மருத்துவமையில் உள்ள தயானந்த் பாட்டீல், வளைகுடா நாடான ஜோர்டானில் 9 மாதங்கள் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.இதனால் புணே தொடர் குண்டு வெடிப்புக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான தொடர்பு குறித்து புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
|