புதுடெல்லி, செல்போன் "டவர்"ளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என ஆய்கள் தெரிவிக்கின்றன. எனவே செல்போன் கோபுரத்தின் கதிர்வீச்சு அளவை தற்போதைய நிலையில் இருந்து 10-ல் ஒரு பங்காக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்த புதிய விதிமுறைகளின்படி, உள்நாட்டு தயாரிப்பு மற்றும் இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் கதிர்வீச்சின் அளவையும் குறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் பயன்படுத்துபவர்கள் கதிர்வீச்சு பாதிப்பை குறைக்க "ஹெட்செட்" பயன்படுத்துவது சிறந்தது என்றும் கூறினார். அப்படியானால் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் விலை மலிவான தரம் குறைந்த செல்போன்கள். . ?
|