கவுகாத்தி : அசாமில் வன்முறை வெடிப்பதற்கு காரணமான சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அசாமில் பழங்குடியின மக்களுக்கும் வங்கதேசத்திலிருந்து வந்து குடியேறிய சிறுபான்மையின மக்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது. இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த கலவரத்தை தூண்டியதாகக் கூறி, போடோலாந்து மக்கள் முன்னனியை சேர்ந்த பிரதீப் பிரம்மா என்ற எம்.எல.ஏ வை கைது செய்து, அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, எம்,எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து கோக்ரஜார் மாவட்டத்தில் வன்முறை வெடிக்காமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
|