செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும், மங்கள்யான் செயற்கைகோள் அடுத்த மாதம், 5ம்தேதி ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான காரணிகள் உள்ளனவா என்பது குறித்தும், கனிம வளம் குறித்தும் ஆய்வு செய்யும் நோக்கில், மங்கள்யான் செயற்கைகோள் இம்மாத இறுதியில் ஏவப்படும் என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் பசிபிக் பெருங்கடலில் நிலவிய, மோசமான வானிலை காரணமாக, தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், விண்கலம் ஏவுவதற்கான வாரியத்தின் கூட்டம், நேற்று நடந்தது. இதில், மங்கள்யான் செயற்கைகோளை அடுத்த மாதம், 5ம் தேதி ஏவமுடிவு செய்யப்பட்டது. இதன்படி, சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நவம்பர் 5ம்தேதி, செவ்வாய்கிழமை பி.எஸ்.எல்.வி., சி 25 ராக்கெட் மூலம் பிற்பகல், 3:28 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, நேற்று, இஸ்ரோ வெளியிட்டது.
|