திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணியளவில் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். நேற்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று(ஆகஸ்ட் 28) முதல் 31ம் தேதி வரை வழக்கமான கணபதி ஹோமம், உஷபூஜையுடன், உதயஷ்டமன பூஜை, படிபூஜை, நெய் அபிஷேகம் ஆகியன நடைபெறும். 31 ஆம் தேதி இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் பாடி கோவில் அடைக்கப்படும். இன்று முதல் 30 ஆம் தேதி வரை சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஓணம் விருந்து அளிக்கப்படுகிறது.
|