எல்லை தாண்டி மீன் பிடிக்கும், மீனவர்களை, கைது செய்யும் விவகாரத்தில், இலங்கை அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளபோவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், தாக்குவதும் தொடர்கதையாகி வரும் நிலையில், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து, உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய சிண்டே கூறியதாவது,
இந்திய மீனவர்கள், இலங்கை கடற்ப்படையால் தாக்கப்படும் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தானுடன், இந்தியா புரிந்துணர்வு அடிப்படையில், ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் படி, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள், மீன்பிடிக்கச் செல்லும், இந்திய மீனவர்களை, அந்நாட்டு அரசு, கைது செய்ததும், உடனடியாக, இந்தியாவுக்கு, பாகிஸ்தான் கடற்படை தகவல் தெரிவிக்கிறது. இதேபோல், இலங்கை அரசுடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஷிண்டே தெரிவித்தார்.
|