|
|||||
இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிகொடுக்க 100 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு ! |
|||||
போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்துக்காக மத்திய அரசு இரண்டாம் கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முதல்
கட்டமாக, இத்திட்டத்தின் கீழ், 1,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து, இரண்டாம் கட்ட பணிகள், ஆறு மாதங்களுக்கு முன், துவங்கப்பட்டன. இரண்டாம் கட்ட பணிகளுக்காக, இதுவரை,
100 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கி உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகை கொழும்பில் உள்ள வங்கிகள் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரிடையாக
செலுத்தப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வைத்து பயனாளிகள் தாங்களாகவே வீடுகளை கட்ட வேண்டும். இந்த வீட்டு வசதி திட்டத்தை நடைமுறைப்படுத்தவும்,
கண்காணிக்கவும், இலங்கையில் உள்ள, இந்திய தூதரகத்தில், சிறப்பு குழு செயல்பட்டு வருகிறது.இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், 43 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இவற்றில், 39 ஆயிரம் வீடுகள்,
இலங்கையின் வடக்கு மாகாணத்திலும், 4,000 வீடுகள், கிழக்கு மாகாணத்திலும், கட்டித் தரப்படவுள்ளன.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்துக்காக மத்திய அரசு இரண்டாம் கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
|
|||||
by Swathi on 08 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|