புது டெல்லி : மும்பை தீவிரவாத தாக்குதல் அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது, தூக்குத் தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த 2008 நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் தாஜ் ஓட்டல், சத்ரபதி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மும்பை ஆர்தர் ரோடு சிறையில் உள்ள தனி செல்லில் அடைக்கப்பட்டுள்ள கசாப்புக்கு, மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில், கடந்த 2010 மே மாதம் 6 ஆம் தேதி மும்பை நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தனக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கசாப் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தான். ன்று இம்மனு மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்,அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை சரிதான் என்று கூறி அதனை உறுதி செய்தது.
|