பெங்களூரூ: கர்நாடகத்தில் கைதான தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், கல்பாக்கம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள கைகா அணுமின் நிலையங்களை தகர்க்க அவர்கள் சதி திட்டம் தீட்டியது அம்பலமானது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் ஊப்ளியில் கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கர்நாடக போலீசார் ஆந்திர மாநில போலீசாருடன் இணைந்து செயல்பட்டு ஐதராபாத் நகரில் நேற்று முன்தினம் உபெத்துல்லா உர் ரகுமான் என்ற தீவிரவாதியை கைது செய்தனர். மேலும் மராட்டிய மாநிலம் நாந்தெட் பகுதியில் 4 தீவிரவாதிகளை அந்த மாநில தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்து உள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் அணுமின் நிலையங்கள் இருப்பதால், விரைவில் மின் உற்பத்தியை தொடங்க இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு மத்திய ரிசர்வ் போலீசின் அதிவிரைவு படையினர் 100 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 200 பேரும் அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பெங்களூரூ: கர்நாடகத்தில் கைதான தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், கல்பாக்கம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள கைகா அணுமின் நிலையங்களை தகர்க்க அவர்கள் சதி திட்டம் தீட்டியது அம்பலமானது.கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் ஊப்ளியில் கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கர்நாடக போலீசார் ஆந்திர மாநில போலீசாருடன் இணைந்து செயல்பட்டு ஐதராபாத் நகரில் நேற்று முன்தினம் உபெத்துல்லா உர் ரகுமான் என்ற தீவிரவாதியை கைது செய்தனர். மேலும் மராட்டிய மாநிலம் நாந்தெட் பகுதியில் 4 தீவிரவாதிகளை அந்த மாநில தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்து உள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் அணுமின் நிலையங்கள் இருப்பதால், விரைவில் மின் உற்பத்தியை தொடங்க இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு மத்திய ரிசர்வ் போலீசின் அதிவிரைவு படையினர் 100 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 200 பேரும் அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
|