புதுடெல்லி : வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக இணையதளம் மற்றும் செல்போன் மூலமாக வதந்திகளை விடுத்தது தொடர்பாக பேஸ்புக், யூ டியூப் ஆகிய சமூக வலைதள நிறுவனங்களிடம் மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு ஒத்துழைக்காத டுவிட்டர் இணையதளம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அசாமில் போடோ இனத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாதம் மோதல் வெடித் தது. இது பெரும் கலவரமாக மாறியது. இந்நிலையில் கடந்த வாரம் பெங்களூர், புனே, ஐதராபாத், சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேற தொடங்கினர். இமெயில் மற்றும் செல்போனில் அவர்களுக்கு மிரட்டல் செய்தி வந்ததே இதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்திகள் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டிருப்பதை உள்துறை அமைச்சகம் கண்டுபிடித்துள்ளது.
|