புதுடெல்லி : டெல்லி குற்றப்பிரிவு போலீசில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகத்தின் இயக்குனர் கிரீஷ்குமார் அளித்துள்ள புகாரில், கர்நாடக மாநிலம் பெங்களூர் ஹொசஹள்ளி தேசிய எரிசக்தி கமிஷன் என்ற பெயரில் ஒரு வெப்சைட் இயங்கி வருகிறது. அந்த வெப்சைட்டில் இந்த கமிஷன் மத்திய அரசு நிறுவனத்திற்கு சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற கமிஷனை மத்திய அரசு சம்பந்தப்பட்ட அமைச்சரவையோ அல்லது மாநில அரசோ அமைக்கவில்லை. இந்த வெப்சைட்டில் அஞ்சல் முகவரியும் தெளிவாக இல்லை. சூரிய எரிசக்தி, உயிரி எரிவாயு, மைக்ரோ ஹைடல், பயோ,மாஸ் எனர்ஜி உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் குறித்த தகவல்கள் இந்த வெப்சைட்டில் உள்ளன.மேலும் பல்வேறு திட்டங்களின் விண்ணப்பங்களும் இந்த வெப்சைட்டில் இடம்பெற்றுள்ளன. இந்த வெப்சைட்-ன் மூலம் மத்திய அரசின் பெயரை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், எனவே அந்த வெப்சைட்டை தடை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
|