டெல்லி : ஈரானில் நடக்கும் அணி சேரா நாடுகளின் மாநாட்டில், பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் டெஹ்ரான் சென்றுள்ளார். ஈரான் நாடு, அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் புகார்கள் கூறி வருகின்றன. இதனால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஈரானிலிருந்து, கச்சா எண்ணெய், வாங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரான் தலைநகர் டெஹ்ரானில், நாளையும், நாளை மறுநாளும், அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட, 41 நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
|