திருவனந்தபுரம் : கேரளாவில் திருச்சூர், ஆலப்புழா, கொல்லம் ஆகிய இடங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சுனாமி பீதியால் மக்கள அச்சம் கொண்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இடம் பெயர்ந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆலப்புழா, கொல்லம், திருச்சூர் ஆகிய இடங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆலப்புழாவில் புறக்காடு, குன்னப்றா ஆகிய இடங்களில் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மேலும் 5 வீடுகள் இடிந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். தொடுபுழா அருகில் உள்ள கரிங்குன்றத்தில் உருவான நிலஅதிர்வு, இடுக்கி குளமாவில் உள்ள கேரள மின்வாரியத்தின் பூகம்ப மானியில் 1.5 ரிக்டர் என பதிவானது. இடுக்கி மாவட்டத்தில் நிலஅதிர்வு உணரப்பட்டாலும் பெரியாறு அணைப்பகுதியில் இது குறித்த எந்த சலனமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
|