ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கொண்டுவந்த தூக்கு தண்டனையை தடை செய்யக் கோரும் தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இத்தீர்மானத்தின் படி அனைத்து நாடுகளும் மரண தண்டனை விதிக்க கூடாது.மேலும் கர்ப்பிணிகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த தண்டனையில் விலக்கு அளிக்க வேண்டும்.இத்தீர்மானத்துக்கு எதிராக இந்தியா,அமெரிக்கா,சீனா,ஜப்பான் போன்ற 39 நாடுகள் வாக்களித்தன.இத்தீர்மானத்தை ஆதரித்து ஆஸ்திரேலியா, பிரேசில், தென்னாப்ரிக்கா போன்ற 110 நாடுகள் வாக்களித்துள்ளது.தூக்கு தண்டனையை தடை செய்யக் கோரும் இத்தீர்மானம் எந்த உறுப்பு நாட்டையும் கட்டுப்படுத்தாது என அரசு வட்டாரங்கள் தெரிவிகின்றன.
|