இந்திய - வேஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று நடை பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது, முன்னதாக நடைபெற்ற 2 போட்டிகளிலும் இருஅணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்ததால் இந்த போட்டியில் கட்டாய வெற்றி பெற இரு அணிகளும் கடும் முயற்சியுடன் களமிறங்கின. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 264 ரன்களை நிர்ணயித்தது. இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 46.1 ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி, டெஸ்ட் மட்டுமின்றி ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா தரப்பில் சிறப்பாக விளையாடிய ஷிகார் தவான் சதம் அடித்தார்.
|