புதுடெல்லி, ஆகஸ்ட் 23, லஞ்ச ஊழல் மற்றும் கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி யோகா குரு பாபா ராம்தேவ் போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில் அவரால் நடத்தப்படும் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த நிறுவனங்களில் மீது வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாபா ராம்தேவின் ஆயுர்வேத நிறுவனத்தில் 58 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. மற்றொரு நிறுவனமான யோக ஷிவ்ரிஸ் என்னும் நிறுவனத்தில் ஐந்து கோடிக்கானா முறைகேடு குறித்தும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பதஞ்சலி யோகா பீடம் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களிடம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்தும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
|