LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக ஸ்ரீனிவாசன் பதவியேற்பு !

அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியாவின் சண்டிகார் மாநிலத்தில் பிறந்த ஸ்ரீகாந்த்.ஸ்ரீனிவாசன் நேற்று பதவியேற்றார். 


சண்டிகார் மாநிலத்தில் பிறந்த ஸ்ரீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறினார். அமெரிக்காவில் பிரபல வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த இவர் பின் அரசு வழக்குரைஞராகப் பதவி உயர்வு பெற்றார். அரசு வழக்குரைஞராக சிறப்பாக பணியாற்றிய இவரை டி.சி. சர்க்யூட் நீதிமன்ற நீதிபதியாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த 2012 ஜூனில் நியமித்தார். இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது. எனினும், அப்போது செனட் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டதால், அவரது நியமன உத்தரவு அதிபருக்கே திருப்பி அனுப்பப்பட்டது. ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனை ஒபாமா மீண்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமித்தார். அதற்கு செனட் உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து அவர், நாட்டின் இரண்டாவது அதிகாரம் மிக்க நீதிமன்றமான டி.சி. சர்க்யூட் நீதிமன்றத்தின் நீதிபதியாக நேற்று பதவி ஏற்று கொண்டார்.  ஸ்ரீனிவாசனுக்கு இந்திய மக்களின் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன், இளைய வயதில் இவ்வளவு பெரிய சாதனையை செய்துள்ளார்.அவர் மேலும் சாதனைகளைப் படைக்க உள்ளார். விரைவில் அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாவார் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

by Swathi   on 18 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.