அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியாவின் சண்டிகார் மாநிலத்தில் பிறந்த ஸ்ரீகாந்த்.ஸ்ரீனிவாசன் நேற்று பதவியேற்றார்.
சண்டிகார் மாநிலத்தில் பிறந்த ஸ்ரீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறினார். அமெரிக்காவில் பிரபல வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த இவர் பின் அரசு வழக்குரைஞராகப் பதவி உயர்வு பெற்றார். அரசு வழக்குரைஞராக சிறப்பாக பணியாற்றிய இவரை டி.சி. சர்க்யூட் நீதிமன்ற நீதிபதியாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த 2012 ஜூனில் நியமித்தார். இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது. எனினும், அப்போது செனட் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டதால், அவரது நியமன உத்தரவு அதிபருக்கே திருப்பி அனுப்பப்பட்டது. ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனை ஒபாமா மீண்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமித்தார். அதற்கு செனட் உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து அவர், நாட்டின் இரண்டாவது அதிகாரம் மிக்க நீதிமன்றமான டி.சி. சர்க்யூட் நீதிமன்றத்தின் நீதிபதியாக நேற்று பதவி ஏற்று கொண்டார். ஸ்ரீனிவாசனுக்கு இந்திய மக்களின் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன், இளைய வயதில் இவ்வளவு பெரிய சாதனையை செய்துள்ளார்.அவர் மேலும் சாதனைகளைப் படைக்க உள்ளார். விரைவில் அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாவார் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
|