நார்வேயில் தனது குழந்தையை கண்டித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தம்பதிக்கு சிறைத் தண்டனை வழங்கி நார்வே நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினீயர் சந்திரசேகர், அவரது மனைவி அனுபமா. இவர்கள் இருவரும் தனது குழந்தைகளுடன் நார்வேயில் வசித்து வருகின்றனர்.இவர்களது ஏழு வயது மகன், பள்ளி வாகனத்தில் சிறுநீர் கழித்தான் என்றும், பள்ளியில் விளையாடக் கொடுத்த பொம்மை வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டான் என்றும் பள்ளியிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து சந்திரசேகர் - அனுபமா தம்பதியினர், தங்களின் குழந்தையைக் கண்டித்தனர். இந்தியாவுக்கு அனுப்பி விடுவோம் என்று குழந்தையை மிரட்டி வைத்ததாக கூறப்படுகிறது.இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் நார்வே போலீசில் புகார் செய்தது.இதனால் பெற்றோர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கில் நேற்று நார்வே நீதிமன்றம் தீர்ப்பளித்தது அதில் குழந்தையை பெல்ட் போன்ற பொருளால் தாக்கியுள்ளதும், கரண்டியால் சூடுபோட்டதும் நிரூபிக்கப்பட்டது.எனவே, தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.இத்தீர்ப்பை எதிர்த்து இரண்டு நாள்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்யவும் அனுமதியளித்தது.
|
An Indian software professional and his wife were held guilty here on Tuesday of “serious child abuse” and awarded imprisonment for 18 months and 15 months.Chandrasekhar and his wife Anupama, who were arrested last month, were convicted of gross or repeated maltreatment of their child by threats, violence or other wrongs. They have a couple of days to appeal.Oslo District Court has found an Indian couple guilty on several counts of child abuse. In the view of the court the couple deliberately burned their son’s leg with a hot spoon an official statement said.The court said it was proven that on one occasion, the parents had even threatened to brand their son’s tongue with a hot spoon. |