LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவில் திருமணம் என்பது ஒப்பந்தமில்லை: அமைச்சர் அஸ்வினிக்குமார்.

சமகாலத்தின் உண்மை நிலவரங்களைப் பிரதிபலிப்பதாகவே சட்டங்கள் இருக்க வேண்டும். ஏதோ ஒரு வழக்கினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சட்டங்களை உருவாக்கிக் கொள்ள முடியாது. பல ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் பொருந்தக் கூடியதாக சட்டங்கள்  இருக்க வேண்டும். சட்டங்கள் நாடு முன்னேறுவதற்கு உதவ வேண்டுமே தவிர, பின்தங்குவதற்கு வழிவகுத்துவிடக் கூடாது.

தற்போது பாலியல் குற்றங்கள் தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனைவியின் விருப்பமின்றி கணவன் உறவு கொள்வதை  இதில் பல்வேறு காரணங்களுக்காகச் சேர்க்கவில்லை. அதில் ஒரு காரணம், மற்ற ஜனநாயக நாடுகளைப் போல, திருமணம் என்பது இந்தியாவில் ஒரு ஒப்பந்தமாகக் கருதப்படவில்லை என்பதுதான். இருப்பினும் கணவரை விட்டுப் பிரிந்த ஒரு பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தினால் அந்தக் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

அமைச்சரவையின் முன்பாக இந்த அவசரச் சட்டம் அடுத்த வாரம் வைக்கப்படவிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த தில்லி பாலியல் சம்பவத்துக்குப் பின், மிகக் குறைந்த நேரத்தில் பாலியல் குற்றம் தொடர்பான மசோதாவைத் தயாரித்தது. அரசின் ஒரு சாதனைதான்.

சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சட்டத்தில் ஓட்டைகள் இருந்தால், அது அப்பட்டமான மீறல்களுக்கே வழிவகுக்கும். இந்திய தண்டனைச் சட்டம் 498(ஏ) பிரிவின்படி வரதட்சணைக் கொடுமைக்கு தண்டனை அளிக்கலாம். ஆனால் இந்த சட்டப் பிரிவானது இப்போது பெரிய அளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து நான் எதுவும் செய்ய இயலாது. நான் ஏதாவது செய்தால், சில மகளிர் அமைப்புகள் அதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிவிடுவார்கள் என்றார் ஒரு கருத்தரங்கில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார்.

by MAYIL   on 11 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.