சுமார் 400 பயணிகள் வரை பயணிக்கும் ரயில் பெட்டிகளை தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தற்போது ரயில்வே துறை இயக்கும் ரயில்களில், இணைக்கப்படும் பயணிகள் பெட்டிகளில், அதிகபட்சம், 250 பேர் நின்று செல்ல முடியும்; 90 பேர் உட்கார்ந்து செல்ல முடியும். இவற்றின் திறன், 16 டன் எடையைத் தாங்கும் அளவிற்கு மட்டுமே உள்ளன.
விழாக்காலங்களிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் ரயில் பெட்டிகளில் அதிகமானோர் பயணிக்கும் போது, பெட்டியின் ஆக்சில் மற்றும் ஸ்பிரிங் உடைந்து போகின்றன. அது மட்டுமல்லாமல் ரயில்களை அதிக வேகத்தில் இயக்கமுடிவதில்லை. எனவே கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக அதிக எடை தாங்கும், அதாவது 400 பேர் பயணிக்கும் ரயில் பெட்டிகளை தயாரிக்க, ரயில்வே துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, 120 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த பெட்டிகளுடன் ரயில், மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும் என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
|