இந்திய ரூபாய் நோட்டுகளை, மாலையாக பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பந்தல்களை அலங்கரிக்கவும், சுவாமி சிலைகளுக்கும், தலைவர்களுக்கும் மாலையாக அணிவிக்க ருபாய் நோட்டுகளை சிலர் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தினால் ரூபாய் தாள்கள் சேதமடைந்து அதன் ஆயுள்காலம் குறைந்து விடுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு ரூபாய் தாள்களை தவறாகப் பயன்படுத்தாமல் அதனை மதிக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
|