LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு போராடி வரும் இந்தியப் பெண் லட்சுமிக்கு சர்வதேச துணிச்சல் மிக்க பெண் விருது வழங்கப்படுகிறது !!

உலக அளவில் துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் இன்டர்நேஷனல் வுமன் ஆப் கரேஜ் அவார்ட்(International Women of Courage Award) இந்த வருடம் இந்தியாவை சேர்ந்த ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகி, போராடி வரும் லட்சுமிக்கு வழங்கப் பட உள்ளது. 


கடந்த 2007ல் உருவாக்கப்பட்ட இந்த விருது, மனித உரிமை, பெண்கள் சம உரிமை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக துணிச்சலுடன் போராடும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் பெண் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரே சர்வதேச விருது இது மட்டுமே. 


லட்சுமியுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான், பிஜி, ஜியார்ஜியா, சவூதி அரேபியா, கவுதமாலா, உக்ரைன், மாலி, தஜிகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளார்கள். 


இந்த விருதை உலக மகளிர் தினமான மார்ச் 8 ம் தேதி அமெரிக்க அதிபரின் மனைவி மிச்செல் ஒபாமா வழங்க உள்ளார். 


முன்னதாக, கடந்த 2005-ஆம் ஆண்டு லட்சுமி என்ற பெண் டெல்லியின் கான் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது அவருடைய நண்பரின் சகோதரர் ஒருவர், அவர்மீது ஆசிட் வீசினார். அதில் அவருடைய முகம் நிரந்தரமாக விகாரமானது. இதனால், லட்சுமி முடங்கி போய் விடாமல், ஆசிட் தாக்குதலுக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தினார்.


ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு, அவர்களுக்கான இழப்பீடு குறித்தும் ஆசிட் தாக்குதலை தடுப்பது பற்றியும் அவரே முன்னின்று இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.


மேலும், சட்டவிரோதமாக ஆசிட் விற்கப்படுவதை தடுக்க 27 ஆயிரம் கைழுத்துக்கள் அடங்கிய புகார் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து ஆசிட் விற்பனையின் ஒழுங்குமுறைகளை உடனடியாக அமல்படுத்தவும், மக்களவையில் இதுகுறித்த விவாதத்தை நடத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 04 Mar 2014  0 Comments
Tags: Laxmi   International Women of Courage Award   International Women of Courage Award 2014   Indian Women Laxmi   Acid Laxmi   ஆசிட் லட்சுமி   துணிச்சல் பெண் மணி  
 தொடர்புடையவை-Related Articles
ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு போராடி வரும் இந்தியப் பெண் லட்சுமிக்கு சர்வதேச துணிச்சல் மிக்க பெண் விருது வழங்கப்படுகிறது !! ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு போராடி வரும் இந்தியப் பெண் லட்சுமிக்கு சர்வதேச துணிச்சல் மிக்க பெண் விருது வழங்கப்படுகிறது !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.