துபாய் நகரத்தில் சொத்துக்கள் வாங்குவதில் இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாக துபாய் வருவாய் துறை தெரிவித்துள்ளது.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரமான துபாயில் வீடு, அலுவலகம் மற்றும் பல வகையான சொத்துக்களை, இந்தியர்கள் வாங்கி வருகின்றனர். அனைத்து நாடுகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து பொருள் ஈட்டுவதால், சொத்துக்கள் வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த ஆண்டு மட்டும், 162 நாடுகளைச் சேர்ந்தவர்கள் துபாயில் சொத்துக்கள் வாங்கியுள்ளனர். இங்கு சொத்துக்களை வாங்குவதில், இந்தியர்கள் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் பிரிட்டனைச் சேர்ந்தவர்களும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானியர்களும் உள்ளதாக துபாய் வருவாய் துறை இயக்குனர், சுல்தான் பட்டி பின் மஜ்ரேன் கூறியுள்ளார்.
|