|
|||||
பெரிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய அமைச்சர்களை மிரட்டுவதாக வீரப்ப மொய்லி புகார் ! |
|||||
அந்நிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய அமைச்சர்களை மிரட்டுவதாக, தற்போது பெட்ரோலிய அமைச்சராக இருக்கும் வீரப்ப
மொய்லி திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, கச்சா எண்ணெய் இறக்குமதியால் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு
குறைந்து வருவதாகவும் எனவே இறக்குமதியைக் குறைக்க அரசு பல்வேறு வகையில் முயற்சி செய்து வருவதாக அவர் தெரிவித்தார். ஆனால், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு எதிராக
பெரிய எண்ணெய் நிறுவனகள் செயல்படுவதாகக் கூறிய வீரப்ப மொய்லி, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க விடாமல் பெட்ரோலிய அமைச்சர்களை அந்தக் குழுக்கள் மிரட்டுவதாகவும் கூறினார்.
அவர்கள் யார்யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். எனினும், எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியில் தன்னை யாரும் மிரட்ட இயலாது
என்றும் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
அந்நிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய அமைச்சர்களை மிரட்டுவதாக, தற்போது பெட்ரோலிய அமைச்சராக இருக்கும் வீரப்ப மொய்லி திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, கச்சா எண்ணெய் இறக்குமதியால் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதாகவும் எனவே இறக்குமதியைக் குறைக்க அரசு பல்வேறு வகையில் முயற்சி செய்து வருவதாக அவர் தெரிவித்தார். ஆனால், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு எதிராக பெரிய எண்ணெய் நிறுவனகள் செயல்படுவதாகக் கூறிய வீரப்ப மொய்லி, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க விடாமல் பெட்ரோலிய அமைச்சர்களை அந்தக் குழுக்கள் மிரட்டுவதாகவும் கூறினார்.
|
|||||
by Swathi on 14 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|