LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவில் எஞ்சின் இல்லாத ரயிலின் முதல் வெள்ளோட்டம்!

இந்தியாவில் என்ஜினே இல்லாத டிரெயின் 18 என்ற ரயிலின் முதல் வெள்ளோட்டம் உத்தரப் பிரதேசத்தின் பரேய்லி - மொரதாபாத் இடையே  நடைபெற உள்ளது. 

சென்னை பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் முதன் முறையாக எஞ்சின் இல்லாத டிரெயின் 18 என்கிற ரயில் தயாரிக்கப்பட்டு உள்ளது. 16 பெட்டிகள் கொண்ட எஞ்சின் இல்லாத ரயிலைச் சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை தயாரித்து உள்ளது. 

முப்பதாண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் ஓடும் சதாப்தி ரயில்கள் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுபவை. ஆனால் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள எஞ்சின் இல்லாத ரயில் மணிக்கு 160 கிலோமிட்டர் வேகத்தில் ஓடும் திறன்பெற்றது.

மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன்பெற்ற இந்த ரயில் தண்டவாளத்தில் இயக்கி வெள்ளோட்டம் பார்ப்பதற்காக ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனத்திடம் கடந்த மாத இறுதியில் ஒப்படைக்கப்பட்டது. 

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பரேய்லி - மொரதாபாத் இடையில் உள்ள தண்டவாளத்தில் இந்த ரயிலை இயக்கி  வெள்ளோட்டம் பார்க்க உள்ளனர். 

இப்போதுள்ள தண்டவாளங்கள் இதற்குப் பொருந்தினால் சதாப்தி ரயில்களில் செல்வதைவிட இவ்வகை ரயில்களில் பயணநேரம் 15 விழுக்காடு அளவுக்குக் குறையும் எனக் கூறப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் நிற்கும்போது தானியங்கிக் கதவுகள் திறக்கும். ரயில் புறப்படுமுன் கதவுகள் மூடிக்கொள்ளும்.

by Mani Bharathi   on 17 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.