LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஈரானிடம் இருந்து தொடர்ந்து இந்தியா  எண்ணெய் வாங்கும் முடிவு  எந்த வகையிலும் உதவாது..

ஈரானிடம் இருந்து தொடர்ந்து இந்தியா  எண்ணெய் வாங்கும் முடிவு  எந்த வகையிலும் உதவாது என அமெரிக்கா மிரட்டும் தொனியில் கூறியுள்ளது. 

அமெரிக்க அதி்பர் டொனால்ட் டிரம்ப் எடுத்த திடீர் முடிவின் காரணமாக, ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா விலகியது. தொடர்ந்து ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தது.  

மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் நவம்பர்  4ம் தேதிக்குப் பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. 

இந்த நிலையில், அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வரும் இந்தியா, எத்தகைய முடிவை எடுக்கும் என்று உலக நாடுகள் உற்றுநோக்கி வந்தன. ஆனால், ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்யப்படும் என இந்தியா அறிவித்தது.

இதனால், இந்தியாவின் மீதும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரானுக்கான அமெரிக்க  சிறப்பு பிரதிநிதி பிரைன் ஹூக் இந்தியா வருகிறார். 

அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நவ்வட்  கூறியதாவது:

ஈரானிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்து இருக்கும் அனைத்து நாடுகள் மீதான பொருளாதார தடைகள் 4ம் தேதி முதல் அமலுக்கு வரும். பொருளாதார தடைகளை செயல்படுத்துவதில் அமெரிக்கா முனைப்புடன் உள்ளது.

ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய்,  ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்கும் இந்தியாவின் முடிவு, எந்த வகையிலும் இந்தியா-அமெரிக்கா உறவில் உதவப்போவது கிடையாது. இந்தியாவின் மீதான தடைகள் குறித்து மிக கவனமாக மீண்டும் பரிசீலனை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

by Mani Bharathi   on 13 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.