நாள் ஒன்றுக்கு 40 சிகரெட் வரை ஊதி தள்ளும், இந்தோனேஷிய சிறுவனுக்கு அந்நாட்டு அரசு மறுவாழ்வு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த தம்பதி முகமது, டயானா, இவர்களுக்கு நான்கு வயதில் ஆல்தி ரிஜால் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. ஆல்தி ரிஜால் இரண்டு, வயதிலிருந்தே, புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டான். தற்போது நாளொன்றுக்கு 40 சிகரெட்டுகளை புகைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளான். இதை அறிந்த இந்தோனேஷிய அரசு, குழந்தையின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த, அவனுக்கு விளையாட்டு பயிற்சிகளுடன் கூடிய, புகைக்கும் பழக்கத்தை மறக்கடிக்கும் பயிற்சிகள் அளித்து வருகிறது. இந்தோனேஷியாவில், பத்து வயதிற்கு கீழ் உள்ள, மூன்றில் ஒருவர், புகை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|