LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

இனிமே இப்படித்தான் திரை விமர்சனம் !!

நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார் ஹீரோ சந்தானம். அவருடைய அப்பாவாக எப்போதும் வெறப்பாக வருகிறார் 'ஆடுகளம்' நரேன். சந்தானத்தின் அம்மா பிரகதியோ மிகவும் தெய்வ பக்தி கொண்டவர்.  

ஒருநாள் இவர்கள் சந்தானத்தின் ஜாதகத்தை ஒரு ஜோசியகாரரிடம் கொண்டு போய் கொடுக்கின்றனர். ஜாதகத்தை பார்க்கும் ஜோசியக்காரர், சந்தானத்துக்கு இன்னும் மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் இன்னும் நான்கு வருடம் கழித்துதான் திருமணம் நடக்கும். அப்படியும் நடக்கவில்லையென்றால், சாமியாராக மாறக்கூட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்.

இதைகேட்ட சந்தானத்தின் பெற்றோர்கள் சந்தானத்திற்கு உடனே பெண் பார்க்க தொடங்குகிறார்கள். இவர்கள் பார்க்கும் பெண்கள் யாரும் சந்தானத்திற்கு பிடிக்காமல் போகிறது.

இந்நிலையில் சந்தானத்தின் டைலர் நண்பரான விடிவி கணேஷ், பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம், அழகான பையனுக்கு அசிங்கமான பெண்ணையும், அழகான பெண்ணுக்கு அசிங்கமான பையனையும் தான் திருமணம் செய்து வைப்பார்கள் என்று கூறி காதல் திருமணத்தின் மீது ஈர்ப்பை உண்டாக்குகிறார்.

இந்த அறிவுரையை கேட்ட சந்தானம், அழகான பெண்களை தேடி காதலிக்க ஆரம்பிக்கிறார். இவருக்கு ஏற்றார்போல் எந்த பெண்ணும் கிடைக்காத நிலையில், ஒரு சண்டையில் அஷ்னா சவேரியை பார்க்கிறார். பார்த்தவுடனே அவர் மீது காதல் வயப்படுகிறார். அதன்பின் அஷ்னா சவேரி பின்னாலேயே சுற்றி சுற்றி வந்து தன் காதலை கூறுகிறார். ஆனால் அஷ்னா, சந்தானத்தின் காதலை ஏற்க மறுக்கிறார்.

இந்நிலையில், சந்தானத்தின் பெற்றோர்கள் அகிலா கிஷோரை பெண் பார்க்கிறார்கள். அஷ்னா சவேரி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததாலும், சந்தானத்தின் மாமாவான தம்பி ராமையாவின் சூழ்ச்சியாலும் அகிலா கிஷோரை திருமணம் செய்ய சம்மதித்து, இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. இந்த நேரத்தில், அஷ்னாவுக்கு சந்தானத்தின் மீது காதல் வருகிறது.

இறுதியில் சந்தானம் இருவரில் யாரை கரம் பிடித்தார் என்பதை காமெடியோடு சொல்லியிருக்கும் படம் தான் இனிமே இப்படித்தான்.   

படத்தில் ஹீரோவாக வரும் சந்தானம், தனது முந்தைய படத்தை விட இந்த படத்தில் நடனம், காதல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், சென்டிமென்ட் என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்.  

இரண்டு பெண்களுக்கு மத்தியில் இவர் மாட்டிக்கொள்வது, தாய் மாமாவான தம்பிராமையாவை கலாய்ப்பது, விடிவி கணேஷை கலாய்ப்பது ஆகிய காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது.

முதல் நாயகியான ஆஷ்னா சவேரி மாடர்ன் பெண்ணாக வலம் வந்திருக்கிறார். பாடல் காட்சிகள், சந்தானம் மீது காதல் வயப்படும் காட்சிகள், சந்தானம் மீது கோபப்படும் காட்சிகள் என தன் திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இரண்டாம் நாயகியான அகிலா கிஷோர் குடும்ப பெண்ணாக வந்து மனதில் பதிந்திருக்கிறார். சந்தானத்திற்கு அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன், அம்மா பிரகதி, டெய்லராக வரும் விடிவி கணேஷ், தாய் மாமா தம்பி ராமையா, மற்றும் நண்பர்களாக வருபவர்கள் ஆகிய அனைவரின் நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.  

சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். மொத்தத்தில் இனிமே இப்படித்தான் ஒரு முறை பார்க்கலாம்...

by CinemaNews   on 12 Jun 2015  2 Comments
Tags: Inimey Ippadithan   Inimey Ippadithan Thirai Vimarsanam   இனிமே இப்படித்தான்   இனிமே இப்படித்தான் சினிமா விமர்சனம்           
 தொடர்புடையவை-Related Articles
இனிமே இப்படித்தான் திரை விமர்சனம் !! இனிமே இப்படித்தான் திரை விமர்சனம் !!
கருத்துகள்
04-Aug-2015 04:22:12 Sakthivel said : Report Abuse
ஹெலோ சந்தானம் சார் ஒரு படத்துல, ஒரு சீன்ல வந்தாலும் நாங்க முன் சீட்ல வந்து பார்போம்............
 
20-Jun-2015 03:49:19 kannan said : Report Abuse
supper
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.