|
|||||
இனிப்பு அடை |
|||||
தேவையானவை : கேழ்வரகு மாவு - ஒரு கப் வெல்லம் பொடித்தது - அரை கப் ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - அரை கப் காய்ந்த திராட்சை - ஒரு கைப்பிடி அளவு நெய் - 5 டீஸ்பூன் வரை செய்முறை: 1.ஒரு பத்திரத்தில் வெல்லத்தை போட்டு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் . 2.வெல்லம் கரைந்ததும் அடுப்பிலிருந்து எடுத்து வடிகட்டவும் வடிகட்டிய நீரை மறுபடியும் கொதிக்க வைக்கவும் அப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கேழ்வரகு மாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். 3.மாவு வெல்லத்துடன் சேர்ந்த்து, சற்று கெட்டியானதும் இறக்கி வைக்கவும். 4.ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் காய்ந்த திராட்சை, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை வறுத்து மாவுடன் சேர்க்கவும். ஏலக்காய்த்தூளையும் சேர்த்து, கையில் சிறிது நெய்யைத் தடவிக் கொண்டு நன்றாகப் பிசையவும். 5.பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். 6.தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, சூடானதும், மாவு உருண்டையை கல்லின் நடுவே வைத்து, விரல்களால் வட்டமாகத் தட்டி, சிறிது நெய்யை அடையைச் சுற்றி ஊற்றி வேக விடவும். ஒரு பக்கம் சிவந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கவும் சிவந்ததும், கல்லிலிருந்து எடுத்து வைக்கவும். |
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|