தேவையானவை :
பச்சரிசி - 1 கப் வெல்லம் - 1 1/2 கப் அவல் - 1/2 கப் ஏலக்காய் - 1/4 டீஸ்பூன் நல்லெண்ணெய் - சுடுவதற்கு
செய்முறை :
1.அரிசியையும், அவலையும் தனித்தனியாக நன்றாகக் கழுவி ஊற வைத்து ஒன்றாக தண்ணீர் விட்டு நைசாக அரைத்து அதனுடன் வெல்லத்தையும் போட்டு மறுபடியும் அரைக்கவும்.
2.பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.
3.பணியார சட்டியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி ஒவ்வொரு குழியிலும் 3/4 அளவிற்கு மாவை ஊற்றவும்.
4.மாவு அடிப்பகுதியில் வெந்ததும், குச்சியின் உதவியால் திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
|