தபால் துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால், எஸ்.எம்.எஸ். மூலம் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.
தற்போது உள்ள முறைகளின் படி, தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால், அந்த பணம் உரியருக்கு சென்றடைய சில நாட்கள் ஆகிவிடும். இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்புவதை பொதுமக்கள் குறைத்து வருகின்றனர். இந்நிலையில், மணியாடர் சேவையை துரிதப்படுத்தும் விதமாக, இந்திய தபால்துறை, செல்போன் மணி ஆர்டர் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பணம் யார் பெயருக்கு அனுப்பப்படுகிறதோ, அவருக்கு தபால் நிலையத்தில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். பணம் பெறும் நபர், அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, அந்த எஸ்.எம்.எஸ்.ஐ காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம். 1000 முதல் 10,000 ரூபாய் வரை இந்த செல்போன் மணி ஆர்டர் மூலம் அனுப்பலாம் எனவும், இந்த எஸ்.எம்.எஸ். மணியாடர் முறை இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது எனவும் இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.
|