மனித உரிமை விஷயத்தில், இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சர்வதேச சமூகம் பொருத்து கொள்ளாது என அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர், நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு இறுதி கட்ட போர் முடிந்த பின், அந்நாட்டு அரசு, நல்லிணக்க ஆணைக் குழுவை நியமித்துள்ளது. "இந்த குழு பரிந்துரைத்த விஷயங்களை, இலங்கை அரசு செயல்படுத்த வேண்டும்' என, சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. நல்லிணக்க பணிகள் செயல்படுத்துவதற்கு, நட்பு நாடான இலங்கைக்கு, அமெரிக்கா உதவி செய்யும். மனித உரிமை மீறல் விஷயத்தில் பொறுப்பேற்க தவறுதல், நல்லிணக்க நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் பின்னடைவு போன்றவற்றை, சர்வதேச சமூகம் பொறுத்து கொள்ளாது என நிஷா தேசாய் பிஸ்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிஷா தேசாய் பிஸ்வால் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|